Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.


அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையே ஜனவரி மற்றும் ஜூலை 1 தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னரே இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில் கொடுக்க வேண்டிய அகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி 125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.

இது 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு முரணாக இருக்கும் என்பதால் ஜனவரி அகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு