Skip to main content

710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) 

          பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்தப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 1-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண்களின்படி தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்வு செய்யப்படுவர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு