Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம்

  சிறுபான்மையின பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழை முதல் பாடமாக தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அ
ளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டப் படி சிறுபான்மை மொழி பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும்முதல் பாடமாக (பார்ட்-1) தமிழை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


அதன்படி, கடந்த 2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயம் தமிழில் தேர்வு எழுத வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் தமிழகத் தில் உள்ள சிறுபான்மை மொழி பள்ளிகளில் பயின்ற சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்தாத நிலையில்,தமிழில் தேர்வு எழுதுவது கடினம் எனக்கூறி கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும் அந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஏற்கவில்லை என்றும் எனவே வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைமுதல் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத விலக்கு அளிக்க உத்தரவிடக்கோரி, பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழியில் முதல் பாடமாக தேர்வு எழுதுவது குறித்து பதிலளிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் தமிழில் முதல் பாடமாக தேர்வெழுத விலக்கு அளித்து விசாரணையை வரும் மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா