Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம்

  சிறுபான்மையின பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழை முதல் பாடமாக தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அ
ளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டப் படி சிறுபான்மை மொழி பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும்முதல் பாடமாக (பார்ட்-1) தமிழை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


அதன்படி, கடந்த 2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயம் தமிழில் தேர்வு எழுத வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் தமிழகத் தில் உள்ள சிறுபான்மை மொழி பள்ளிகளில் பயின்ற சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்தாத நிலையில்,தமிழில் தேர்வு எழுதுவது கடினம் எனக்கூறி கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும் அந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஏற்கவில்லை என்றும் எனவே வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைமுதல் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத விலக்கு அளிக்க உத்தரவிடக்கோரி, பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழியில் முதல் பாடமாக தேர்வு எழுதுவது குறித்து பதிலளிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் தமிழில் முதல் பாடமாக தேர்வெழுத விலக்கு அளித்து விசாரணையை வரும் மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு