Skip to main content

பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:



 பணியிடம் காலியாக இருப்பது தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்ட தேதிக்கும், அதற்கான எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிக்கும் இடையே அதிக கால இடைவெளி இருப்பது அரசு கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற காலதாமதமானது, அந்த கால கட்டத்தில் பணிக்குத் தயாராக இருக்கும் தகுதி வாய்ந்த புதியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது போலாகும்.
 ஆதலால், அனைத்து மத்திய அமைச்சகங்கள் அல்லது மத்திய அரசுத் துறைகள், காலியான பணியிடங்களுக்கு புதிய நியமனங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளை, அதாவது பணியிடம் தொடர்பான விளம்பரம் வெளியிடுவது முதல் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடத்துவது வரை அனைத்தையும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 விடுமுறை பயணச் சலுகையைப் பெற புதிய விதி: இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறை பயணக்காலச் சலுகை (எல்டிசி) திட்டத்தில் செல்லும்போது உயரதிகாரிகளிடம் அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை புதிய விதிகளை வகுத்துள்ளது.
 அதில், விடுமுறை பயணக்கால சலுகை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்லும்போது, உயரதிகாரிகளிடம் இனி தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, விடுமுறையில் செல்லும் ஊழியர்கள், தாங்கள் சென்ற இடங்களில் எடுத்த கைப்படங்கள், விடுமுறை விவரங்களை சுயகையொப்பமிட்டு அனுப்பினால் போதும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் புதிய விதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் 15 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்