Skip to main content

5,513 காலியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

5,513 காலியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2016-2017


நிகழாண்டில் 33 பதவிகளில் காலியாகவுள்ள 5,513 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான திட்ட அறிக்கையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி கூறினார்.




சென்னையில் நிகழாண்டுக்கான திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:-
 குரூப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர்கள், 8 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், 1 மாவட்டப் பதிவாளர் உள்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல், நேர்காணல் அல்லாத பணிகள் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களின் விவரங்கள் வர வேண்டியுள்ளது. இதுவும் வரப்பெற்றால் இந்த ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும்.


புதிய பணியிடங்கள்: இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித் துறையில்  5 அதிகாரிகளையும், எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர்களாக 12 பேரையும் பணியில் அமர்த்த தேர்வுகள் நடத்தப்படும். குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 இடமும், குருப் 4 பணியிடத்தில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

2015-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றார்.

பேட்டியின்போது தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு