Skip to main content

257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதெடார்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹ
ரன் வெளியிட்டுள்ள செய்தி:சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் உள்ள சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்கள், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும்.


அனைத்து பிரிவினரும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்பட்டவாகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், கல்விச்சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


அனைத்து பணியிடங்களும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இனச் சுழற்சி முறை மற்றும் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே 3 கி.மீ. சுற்றளவு தூரம் ஆகியற்றின் அடிப்படையிலும் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விண்ணப்ப படிவங்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.காலிப்பணியிடம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் குறித்தும் விண்ணப்பம் வழங்கப்படும் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.29ஆம் தேதிக்குள் அந்தந்த அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு