Skip to main content

மழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜன.20-இல் நடத்த அண்ணா பல்கலை. முடிவு

மழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜன.20-இல் நடத்த அண்ணா பல்கலை. முடிவு: ஏப்ரல் மாதத் தேர்வுகளும் ஒத்திவைப்பு
        மழை, வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜனவரி20-ஆம் தேதி நடத்த அண்ணா பல்கலைக்கழகம்
முடிவு செய்துள்ளது.இதுபோல், ஏப்ரல் மாதத் தேர்வுகளையும் மே மாதத்துக்கு தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

          தொடர் மழை பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழக ஒற்றை இலக்கப் (1,3,5,7,9) பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் ஜனவரி இறுதியில்தான் முடிவடையும். இதனால், வழக்கமாக ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய வகுப்புகள், பிப்ரவரிக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் நடைபெறும் இரட்டை இலக்க (2,4,6,8) பருவத் தேர்வுகளையும் தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:மழை, வெள்ள பாதிப்பு காரணமாக பருவத் தேர்வுகள் மட்டுமின்றி, டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட இருந்த 36-ஆவது பட்டமளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் பட்டமளிப்பு விழா இப்போது ஜனவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கில் நடத்தப்பட உள்ளது. மேலும், வகுப்புகள் தள்ளிப் போவதால் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் தேர்வுகளை மே முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.மேலும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் சனிக்கிழமைதோறும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் என்றனர். 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா