Skip to main content

தள்ளிப்போகும் TET - அடுத்த அடி... (வளரூதியம், ஊக்க ஊதியம்)

ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின்  வளரூதியம், ஊக்க ஊதியம் (increments and incentives) முறையான அறிவிப்பு இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.



        கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு
ஒவ்வொரு வருடமும் முறையாக நடைபெற்றாக வேண்டும். ஆனால் கடந்த 2½ வருடங்களாக தமிழகத்தில் இத்தேர்வு நடத்தப்படாத நிலையில் TET நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் முடிவுக் காலம் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளன என பல ஊடகங்களில் அவ்வப்போது வருகின்றன.

      ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு ஏதும் இப்போதைக்கு வெளியாக வாய்ப்புகள் இல்லாத சூழலில் ஏற்கெனவே மன உளைச்சலில் உள்ள இவ்வாசிரியர்களுக்கு அடுத்த அடியாக வளரூதியம் மற்றும் ஊக்க ஊதியம் சார்ந்த  பலன்களை நிறுத்த தமிழகத்தில் உள்ள பல ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்ததுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

     கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய வளரூதியம் மற்றும் ஊக்க ஊதியம் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் நிறுத்தம் செய்ததால் இப்பிரட்சனையில் உள்ள ஆசிரியர்களுக்கு இது மேலும் மன சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

         வரும் நவம்பர் 2016 வரை தான் இவர்களின் பணிக்காலம் என்ற கானல் நீர் வாழ்க்கை வாழும் இவர்களின் வளரூதியம் ஊக்க ஊதியம் சார்ந்த அரசாணைகளை முறைப்படுத்தி தர வேண்டும் எனவும் வருமான வரி சார்ந்த முன் தரவுகள் தயாரிப்பு செய்வதற்கு முன்பு இந்த நிலைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் வேண்டுதல்கள் வைக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு