Skip to main content

RTI : தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு

அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க சில கூடுதல் மாற்றங்களை, அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஏற்படுத்தியுள்ளது.
         தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பதில் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு பொது தகவல் அலுவலர் முறைப்படி
பதில் அளிக்க வேண்டும்.
           அதில், விண்ணப்பதாரருக்கு திருப்தி ஏற்படாத பட்சத்தில் மீண்டும், அந்த அலுவலரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதில், ஏற்படும் சிரமத்தை தவிர்க்க தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிப்பதில் கூடுதல் மாற்றங்களை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தகவல் பெறும் உரிமை சட்டப்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கும் பதிலில் விண்ணப்ப எண்,பெறப்பட்ட தேதி,தகவல்தரும் அலுவலர் பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் கேட்ட தகவலை தெரிவிக்க முடியாது என்றால் அதற்குரிய காரணத்தை குறிப்பிடவேண்டும். இதே விண்ணப்பத்தை மற்றொரு தகவல் தரும் அதிகாரிக்கு மாற்றினால், அதன் விபரத்தையும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். பதிலை முடிப்பதற்கு முன் முதல் முறை விண்ணப்பமா, மேல்முறையீடா என தெரிவிக்க வேண்டும். பதில் தரும் போது ஏதேனும் ஆவணங்களை அளித்தால், அதற்கான ஆவணங்களில் சான்றொப்பம் இட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது என தெரிவிக்க வேண்டும். அந்த பதிலில் தேதி, தகவல் தரும் அலுவலர் பெயர், அலுவலக முத்திரையை குறிப்பிட்டு சான்றொப்பம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு