Skip to main content

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி  டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,). எந்தெந்த பள்ளிகள்?
மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு, மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) ஆசிரியர் தகுதி தேர்வானது (சி..டி.இ.டி.) நடத்தப்படுகிறது.


இருநிலைத் தேர்வு இரண்டு தேர்வு தாள்களை கொண்ட சி.டி.இ.டி., தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி இரண்டிலும் (1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ஆசிரியர் ஆக பணியாற்ற விரும்புவோர் இரு தேர்வு தாள்களையும் எழுத வேண்டும். கல்வித் தகுதி ஆரம்ப வகுப்புகளான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் கொண்ட, ‘டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன்’ படிப்பை முடித்திருக்க வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், ‘டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன்’ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு விவரம் தேர்வு நாள்: பிப்ரவரி 21, 2016 தாள் 1: ஆரம்பப் பள்ளி (1முதல் 5ம் வகுப்பு) ஆசிரியர்களுக்கான தேர்வு, பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை. தாள் 2: நடுநிலைப் பள்ளி (6 முதல் 8ம் வகுப்பு) ஆசிரியர்களுக்கான தேர்வு, காலை 9.30 முதல் 12 மணி வரை. இடஒதுக்கீடுப் பிரிவில் உள்ளோருக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வின்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 28 மேலும் விவரங்களுக்கு: www.ctet.nic.in

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு