Skip to main content

வெள்ள நிவாரணம் வசூல் பணியில் மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்

வெள்ள நிவாரணம் வசூல் பணியில் மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்: தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை
வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,  என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பொருள் உதவி, முதல்வர் பெயரில் வெள்ள நிவா
ரண நிதி அனுப்பி வருகின்றனர்.


இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களை, மக்கள் மற்றும் கடைகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி வசூலித்து தர பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், ஆனால் அதற்கான வழங்கப்பட்ட ரசீதில் பள்ளி பெயர் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ள நிவாரண நிதி வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ள நிவாரண நிதி வழங்கினால் மட்டுமே பள்ளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அதிக தொகை தரவேண்டும் என்பதற்காக அவர்களை வீடுகளுக்குச்சென்று அந்நிதி வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது. மீறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.