Skip to main content

பல்வேறு தேர்வுகள் தள்ளிவைப்பு!

கனமழை காரணமாக அண்ணா பல்கலை, சட்டப்பல்கலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்., பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் வெளியிட்ட அறிவிப்பில், 'அண்ணா பல்கலையின் தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளைத் தவிர, இணைப்பு கல்லுாரிகளில் வரும், 14ம் தேதி வரை, திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்ட அறிவிப்பில், 'அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், 13ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நகர மற்றும் ஊரமைப்புத் துறையில் உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, 13ம் தேதி எழுத்துத் தேர்வு, சென்னை மையத்தில் ஆன் - லைன் தேர்வாக நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக, தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு நடத்தவிருந்த, கணித ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் மட்டும் டிச., 6ம் தேதி நடக்கவில்லை. இந்தத் தேர்வு, 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா