Skip to main content

பல்வேறு தேர்வுகள் தள்ளிவைப்பு!

கனமழை காரணமாக அண்ணா பல்கலை, சட்டப்பல்கலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்., பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் வெளியிட்ட அறிவிப்பில், 'அண்ணா பல்கலையின் தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளைத் தவிர, இணைப்பு கல்லுாரிகளில் வரும், 14ம் தேதி வரை, திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்ட அறிவிப்பில், 'அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், 13ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நகர மற்றும் ஊரமைப்புத் துறையில் உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, 13ம் தேதி எழுத்துத் தேர்வு, சென்னை மையத்தில் ஆன் - லைன் தேர்வாக நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக, தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு நடத்தவிருந்த, கணித ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் மட்டும் டிச., 6ம் தேதி நடக்கவில்லை. இந்தத் தேர்வு, 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு