Skip to main content

வெள்ளப் பாதிப்பு: மறுசான்றிதழ் வழங்க சென்னை பல்கலை. ஏற்பாடு

வெள்ளப் பாதிப்பில் பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் வெளியிட்ட அறிவிப்பு:



வெள்ளப் பாதிப்பில் பலர் தங்களுடைய பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், கட்டணம் இன்றி உரிய சான்றிதழ்கள் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சான்றிதழைத் தவறவிட்டத்தற்கான காவல் துறை சான்றிதழ், நகர்மன்ற உறுப்பினர் அல்லது வட்டாட்சியரின் ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தால் போதுமானது. அவர்களுக்கு உடனடியாக மறு சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு