Skip to main content

ரயில்களில் அரை டிக்கெட்டுக்கு தனி 'பெர்த்' இனி இல்லை

ரயில்களில் படுக்கை, இரண்டடுக்கு,மூன்றடுக்கு ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் ௫-11 வயது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தால் தற்போது தனி 'பெர்த்' வழங்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்., 10 முதல் முழு டிக்கெட் எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு தனி 'பெர்த்' வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கவுள்ளது.


குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தால், பயணிகள் அவர்களது 'பெர்த்தை' பங்கீட்டு கொள்ளலாம் எனவும் அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், ''இது மறைமுக கட்டண உயர்வாகும். எனவே ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும். அரை டிக்கெட் எடுத்தாலும் குழந்தைகளுக்கு தனி 'பெர்த்' வசதி தொடர வேண்டும்,'' என்றார்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.