Skip to main content

கல்வியறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது சரியானதே: உச்ச நீதிமன்றம் அதிரடி!

புதுடெல்லி: கல்வியறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது சரியானதே என ஹரியானா மாநில அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச கல்வித் தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளை உள்ளடக்கிய சட்ட திருத்தம்
அண்மையில் கொண்டுவரப்பட்டது.

அதன்படி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வி தகுதி ஆண்களுக்கு 10-ம் வகுப்பு, பெண்களுக்கு 8-ம் வகுப்பு மற்றும் தலித் வகுப்பினருக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஹரியானா மாநில பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் , " ஹரியானா மாநிலத்தில் உள்ள 20 வயதை தாண்டிய கிராமப்புற பெண்களில் 83.06 சதவீதத்தினர் புதிய சட்டத்திருத்தத்தின்படி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான கல்வித் தகுதியை கொண்டிருக்கவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள். மேலும் நகர்ப்புறங்களில் உள்ள 67 சதவீதம் பெண்களும் இதே சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்" எனக் கூறியிருந்தனட். இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் , ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயம் செய்தது சரியானது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு