Skip to main content

இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
 இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


 சென்னை கடற்கரை - ஹைதராபாத் பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த ரயில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல், காசியாபேட், செகந்தராபாத் வழியாக ஹைதராபாத் செல்லும். 

 ஜோலார்பேட்டை - திருவனந்தபுரம்: ஜோலார்பேட்டையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.
 சென்னை கடற்கரை - திருநெல்வேலி: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.
 சென்னை கடற்கரை - ராமேஸ்வரம்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் சென்றடையும்.
 சென்னை கடற்கரை - ஹெளரா: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விஜயநகரம், புவனேசுவரம், காரக்பூர் வழியாக ஹெளரா சென்றடையும்.
 அரக்கோணம் - மும்பை சிஎஸ்டி: அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரயில் காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு ரேணிகுண்டா, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்சூர், வாடி, சோலாப்பூர், புணே, கல்யாண் வழியாக மும்பை சிஎஸ்டி சென்றடையும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா