Skip to main content

இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
 இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


 சென்னை கடற்கரை - ஹைதராபாத் பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த ரயில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல், காசியாபேட், செகந்தராபாத் வழியாக ஹைதராபாத் செல்லும். 

 ஜோலார்பேட்டை - திருவனந்தபுரம்: ஜோலார்பேட்டையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.
 சென்னை கடற்கரை - திருநெல்வேலி: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.
 சென்னை கடற்கரை - ராமேஸ்வரம்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் சென்றடையும்.
 சென்னை கடற்கரை - ஹெளரா: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விஜயநகரம், புவனேசுவரம், காரக்பூர் வழியாக ஹெளரா சென்றடையும்.
 அரக்கோணம் - மும்பை சிஎஸ்டி: அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரயில் காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு ரேணிகுண்டா, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்சூர், வாடி, சோலாப்பூர், புணே, கல்யாண் வழியாக மும்பை சிஎஸ்டி சென்றடையும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு