Skip to main content

மிலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-இல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5-இல் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


       மிலாது நபியை கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். 

இதையடுத்து, 23-ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுருந்த அரசு விடுமுறையை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற விருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைத்துள்ளன. இதேபோல், சென்னைப் பல்கலைக்கழகமும் டிசம்பர் 24-ஆம் தேதி நடக்க இருந்த இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.