Skip to main content

ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தன்னார்வமாக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பளம் வழங்கும் அலுவலர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை 31 நாள்களைக் கொண்டு வகுத்து ஒரு நாள் ஊதியத்தை கணக்கிடுவார்.



 இந்த ஒரு நாள் ஊதியத்துக்கான பட்டிலை சம்பந்தப்பட்ட கருவூல கணக்குத் துறை அதிகாரிகள், தயார் செய்வர். ஒரு நாள் ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். மேலும், இந்தக் காசோலையுடன் ஊதியத்தை அளித்த ஊழியரின் பெயர், பதவி, பணிபுரியும் அலுவலகம் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.

காசோலையுடன் கூடிய இந்தத் தகவல் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். நிதி அளிக்கும் இந்தப் பணிக்கென துறைத் தலைமையால் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு அதிகாரி ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், காசோலையையும், ஊதியம் வழங்கிய ஊழியர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித் துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைப்பார். துறைத் தலைமை அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் இதேபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

 100 சதவீத வருமான விலக்கு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிப்போருக்கு 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், ஊதியத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நிதி அளிக்கும் ஊழியர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். இதைக் கொண்டும் வரி விலக்கு பெறலாம். ஒரு நாளைக்கு மேலான ஊதியத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திடலாம். டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள ஊதியம் அனைத்தும் வழக்கமான முறையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும். இந்த உத்தரவுகள் உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசிடம் இருந்து மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், தொகுப்பூதியம் பெறுவோருக்குப் பொருந்தும்.


தன்னார்வமாகவே இருக்க வேண்டும்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி அளிப்பதை ஒவ்வொரு ஊழியரும் தன்னார்வமாகவே அளிப்பதை, சம்பளம் வழங்கும் அதிகாரிகள்-அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு