Skip to main content

தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விகள்: ஒரு வரியில் பதில் அளித்து அதிகாரிகள் சாதனை

மதுரை: தகவல் உரிமை சட்டப்படி நுகர்வோர் ஒருவர் கேட்ட பல கேள்விகளுக்கு, ஒரே ஒரு வரியில் பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய சாதனை படைத்தனர்.

மதுரை சத்யசாயிநகர் பி.பிரேம் ஆனந்த். இவர், 'பொதுத்தகவல் அலுவலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு
செயலர், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை' என்ற விலாசத்திற்கு, 'தகவல் அறியும் உரிமை' சட்டப்படி 20 கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார்.

கேள்விகள்: தமிழகத்தில் மொத்த விவசாய நிலப்பரப்பு, நன்செய், புன்செய் நிலங்கள் எவ்வளவு, சாகுபடி செய்யும் பரப்பளவு, பாசனம் பெறும் நிலப்பரப்பு, மானாவரி நிலப்பரப்பு, விளை நிலங்களை அழித்து கல்குவாரிகளாக மாற்றப்பட்டுள்ள பரப்பளவு, கல்குவாரிகளால் அரசுக்கு கிடைக்கும் வருமானம், கட்டடங்களாக மாறியுள்ள வயல்களின் பரப்பளவு, விவசாயம் அழிந்து வரும் நிலையில் வேறென்ன தொழில் 
முன்னேற்றம் காணப்பட்டுள்ளது, மாற்று தொழிலுக்கு மாறிய விவசாயிகளின் சதவீதம், விவசாயம், விவசாயிகள் மற்றும் பாசன பரப்பு குறைந்துள்ளதா, விவசாயம் குறைய காரணம் என்ன?கருவேல மரங்களை அழிக்க எடுத்துள்ள நடவடிக்கை, குறைந்த பரப்பளவில் அதிக உற்பத்தி செய்யப்படுகிறதா, மண் வளம் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, சிறு, குறு 
விவசாயிகளின் தற்போதைய நிலை, விளை நிலங்களில் கட்டடங்கள் வர காரணம் என்ன, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதா, இதில் அரசியல் குறிக்கீடு உள்ளதா, அரசியல் கட்சியினர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரா, எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர், நில அபகரிப்பு தனி போலீஸ் மற்றும் நீதிமன்றம் செயல்படுகிறதா போன்ற விவரங்களை கடந்த ஜூன் 27ல் கேட்டிருந்தார்.இக்கேள்விகளுக்கு பதிலளிக்க, 
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, அரசு செயலர் அனுப்பினார். எந்த அதிகாரியும் நேரடியாக பதில் கூறவில்லை. உதாரணத்துக்கு, பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் மா.சேகர் கடந்த செப்.,14ல் எழுதிய பதில் கடிதத்தில் '1 முதல் 16 வரை தகவல்கள்: இக்கோட்டத்திற்கு பொருந்தாது. 17 முதல் 19 
தகவல்கள்: இக்கோட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 20வது தகவல்: இக்கோட்டத்திற்கு பொருந்தாது'.இப்படி 20 கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் தந்து, கேள்வி கேட்டவரை திக்குமுக்காட வைத்தார்.
பொதுவாக, தகவல் அறியும் உரிமை சட்டப்படி நுகர்வோர் கேட்கும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு, அதிகாரிகள் பலரிடம் இருந்து உருப்படியான பதில் கிடைப்பது குதிரை கொம்புதான்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு