Skip to main content

80 சதவீத கட்டண சலுகை:பி.எஸ்.என்.எல்., அறிவிப்பு.

சிம் கார்டு இலவசமாக வழங்குவதுடன், 80 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என சென்னை பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன பொதுத் தொடர்பு துணை பொது மேலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கை : பி.எஸ்.என்.எல்., நிறு
வனத்தின், ஜி.எஸ்.எம்., சிம் கார்டுகள், ஜன., 14ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும்.
'பிரீ பெய்டு' திட்டத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 1 நிமிடம் மற்றும் 1 வினாடி அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கு கட்டண குறைப்பு இருக்கும்.வினாடி அடிப்படையில் உள்ள, 36 ரூபாய் திட்டம், நிமிடம் அடைப்படையில் உள்ள, 37 ரூபாய் திட்டங்களில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை உண்டு.  நடைமுறையில் உள்ள, 37 ரூபாய் திட்டத்தில், உள்ளூர் அழைப்பு, எஸ்.டி.டி., மற்றும் டேட்டா இணைப்பு, வினாடிக்கு, 10 பைசா கட்டணம். இதே திட்டத்தில், டேட்டா இணைப்பு இல்லாமல், உள்ளூர் அழைப்பு மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு, வினாடிக்கு, 30 பைசா கட்டணம்.நடைமுறையில் உள்ள, 36 ரூபாய் திட்டத்தில், உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்புகள் மற்றும் டேட்டா இணைப்புக்கு, 3 வினாடிகளுக்கு, 1 பைசா கட்டணம். டேட்டா இணைப்பு இல்லாமல், உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு, 3 வினாடிகளுக்கு, 2 பைசா கட்டணம்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு