Skip to main content

72 மணி நேரம் மழை நீடிக்கும்;அடுத்த 48 மணிநேரம் மோசமாக இருக்கும்-

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னையில் இன்னும் 3 நாட்களுக்கு அதாவது 72 மணிநேரம் மழை தொடர்ந்து நீடிக்கும்; அதே நேரத்தில் அடுத்த 48 மணிநேரம் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆ
ய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த 40 மணிநேரத்துக்கும் அதிகமாக பெய்த மழையால் ஒட்டுமொத்த பெருநகரமே பிரளயத்தை எதிர்கொண்டிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் 48 மணிநேர மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் ரத்தோர் இன்று அளித்த பேட்டி: சென்னையில் இன்று மழையின் அளவு சற்று குறைந்துள்ள போதிலும், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 1976-க்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது இதுவரை மழையானது 50% பதிவாகியுள்ளது. இது 115% வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாம் அடுத்தடுத்து 3 கன மழைகளை இதற்கு முன் சந்தித்து இருக்கிறோம். தற்போது அடுத்தடுத்து 5 முறை குறுகிய இடைவெளியில் கன மழை பெய்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச்செயலாளருடன் விவாதிக்க உள்ளோம். இவ்வாறு ரத்தோர் கூறினார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு