Skip to main content

7 வது ஊதியக்குழு -குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி?-

காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஆணுக்கு ஒரு
யூனிட், பெண்ணுக்கு 0.80 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.60 யூனிட் என, குடும்பத்திற்கு மொத்தம் 3 யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது.
தினமும் ஒரு யூனிட்டிற்கு 475 கிராம் அரிசி அல்லது கோதுமை, 80 கிராம் பருப்பு வகைகள், 100 கிராம் பலசரக்கு பொருட்கள், 125 கிராம் பச்சை காய்கறிகள், 75 கிராம் இதர காய்கறிகள் தேவைப்படும்.அதேபோல் 120 கிராம் பழங்கள், 200 மி.லி, பால், 56 கிராம் சர்க்கரை, 40 கிராம் எண்ணெய் தேவைப்படும். அதன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திற்கு மாதம் 2.5 கிலோ மீன், 5 கிலோ இறைச்சி, 90 முட்டைகள், 5.5 மீ., புது துணி தேவைப்படும்.
வாங்கப்படும் பொருட்களின் விலை (ஒரு கிலோவிற்கு): அரிசி அல்லது கோதுமைக்கு ரூ.25.93, பருப்பு வகைகளுக்கு ரூ.97.84, பலசரக்கு ரூ.58.48, பச்சை காய்கறிகளுக்கு ரூ.38.12, இதர காய்கறிகளுக்கு ரூ.32.80, பழங்களுக்கு ரூ.64.16, சர்க்கரைக்கு ரூ.37.40, எண்ணெய்க்கு ரூ.114.02, மீன்களுக்கு ரூ.268.38, இறைச்சிக்கு ரூ.400.90 செலவாகும்.அதேபோல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.37.74, ஒரு மீ., துணிக்கு ரூ.164.88, ஒரு குடும்பத்திற்கு சோப்பு ரூ.291.31, எரிபொருள், குடிநீர், மின் கட்டணத்திற்கு ரூ.2,304, திருமணம், பொழுதுபோக்கு, திருவிழாக்களுக்கு ரூ.2,033.38, இதர செலவிற்கு ரூ.4,444.13, மொத்தம் ரூ.18 ஆயிரம் இருந்தால் போதும் என, 7 வது ஊதியக்குழு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா