Skip to main content

வெள்ள பாதிப்பு: பி.எஃப். முன் தொகை ரூ.5,000 வழங்கப்படும்

வெள்ள பாதிப்பு பகுதிகளைச் சேர்ந்த தகுதியுடைய பி.எஃப். சந்தாதாரர்களுக்கு திரும்பச் செலுத்தத் தேவையில்லாத வகையில், முன்தொகை ரூ.5,000 வழங்கப்படும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
"சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர், அதை எதிர்கொண்டு மீளுவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இத்தகைய பேரிடர் சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) சந்தாதாரர்களுக்கு திரும்பச் செலுத்தத் தேவையில்லாத வகையில் ரூ.5,000 அல்லது வருங்கால வைப்பு நிதியில் அவர்களது பங்களிப்பில் 50 சதவீதம் எது குறைவோ அது முன் தொகையாக அளிக்கப்படும். அரசு அறிவிக்கையின் அடிப்படையில்...: பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் குறித்து தமிழக அரசு வெளியிடும் அறிவிக்கையின் அடிப்படையில், வெள்ளத்தில் சேதமடைந்த சொத்து (அசையும் சொத்து, அசையா சொத்து) குறித்து உரிய தமிழக அரசு அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும். பின்னர் பி.எஃப். அலுவலகப் படிவம் 31-ஐ பூர்த்தி செய்து பி.எஃப். அலுவலகத்தில் அளிக்க வேண்டும். 4 மாதங்களுக்குள் கிடைக்கும்: சந்தாதாரர்களின் இத்தகைய படிவத்தை ஆய்வு செய்து தமிழக அரசின் அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து 4 மாதங்களுக்குள் திரும்பச் செலுத்தத் தேவையில்லாத முன்தொகை அளிக்கப்படும் என்று எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார். முகப்பேர் பி.எஃப். அலுவலகத்துக்குட்பட்டோர்...: சென்னை முகப்பேரில் உள்ள பி.எஃப். அலுவலகத்துக்குள்பட்ட அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சந்தாதாரர்கள், தமிழக அரசின் அறிவிக்கை வெளியானவுடன் படிவம் 31-ஐ பூர்த்தி செய்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்