Skip to main content

சுப்ரீம் கோர்ட்டின் 43வது தலைமை நீதிபதியாக தாக்குர்

புதுடில்லி :சுப்ரீம் கோர்ட்டின், 43வது தலைமை நீதிபதியாக, திரத் சிங் தாக்குர், 63, நேற்று பதவியேற்றார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.


         இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதியாக, டி.எஸ்.தாக்குர் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சதானந்த கவுடா, ஹர்ஷவர்த்தன், ஸ்மிருதி இரானி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, எம்.பி.,க்கள், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். டி.எஸ்.தாக்குர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இவரது தந்தை, டி.டி.தாக்குர், காஷ்மீர் துணை முதல்வராகவும், ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 
கடந்த 1972ல், ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில், பிளீடராக பணியைத் துவக்கிய, டி.எஸ்.தாக்குர், 1994ல், கூடுதல் நீதிபதியாகவும், அதன்பின், கர்நாடகா ஐகோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.டில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றிய டி.எஸ்.தாக்குர், 2009ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான அமர்வு தான், கிரிக்கெட் சூதாட்டம், மேற்கு வங்க சாரதா சிட் பண்ட் ஊழல், உ.பி., முன்னாள் அமைச்சர் பாபு சிங் குஷ்வஹா மீதான ஊழல் வழக்குகளில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தாக்குரின் பதவிக் காலம், 2017 ஜனவரி, 4 வரை உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்