Skip to main content

பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு சென்னையில் 12-ல் சிறப்பு முகாம்

வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் கூறியதாவது:
மழை வெள்ளத்தில் தங்களுடைய பாஸ்போர்ட்களை இழந்தவர்களுக்கு உதவும் பொருட்டு சென்னையில் வரும் சனிக்கிழமை
(12-ம் தேதி) சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்பட உள்ளது. அமைந்தகரை, வளசரவாக்கம், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் இந்த முகாம் நடைபெறும். மேலும், இவர்களுக்கு புதிதாக பாஸ் போர்ட் பெறுவதற்கான ரூ.3000 கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பொதுமக்கள் சாதாரண நாட்களிலும் வந்து பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, டிச. 8-ம் தேதியில் இருந்து 2 மாதத்துக்குள் புதிய பாஸ்போர்ட்களை பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு ஆர். பாலசுப்பிரமணியனை (044-28525554 / 28513640 / 28513638) தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு