Skip to main content

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் டிச.12 வரை ஒத்திவைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் 12-ஆம் தேதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. 



பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, பின்னர் மறு தேதிகளை அறிவித்தன. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், அறிவிக்கப்பட்ட மறு தேதிகளிலும் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், வரும் 12-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா