Skip to main content

கேஸ் சிலிண்டருக்கு விரைவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி

சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி, சிலிண்டர்களைப் பதிவு செய்யும் முறை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஐஓசிஎல், பிபிசிஎல், ஹச்பிசிஎல் ஆகிய நிறுவனங்கள் புனேயில், தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும்
சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கான மென்பொருள் தற்போது சோதனையில் இருப்பதாகவும், ஒரு மாதத்தில் ஆன்லைன் கட்டண வசதி அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்துள்ள ஹச்பிசிஎல் நுகர்வோர்கள் சிலர், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய கெல்லீஸைச் சேர்ந்த வாடிக்கையாளர் அதிதி சிங், ''தற்போது கார்டு மூலமாகவே கட்டணம் செலுத்துகிறேன்; இதனால் டெலிவரி பையன் வரும்போது பணத்தைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை'' என்றார்.
ஹச்பிசிஎல் முகவர் தட்சிணாமூர்த்தி, ''ஆன்லைனில் பணம் செலுத்தப்படுவதால், நுகர்வோர்கள் வீட்டில் இல்லையென்று முன்பதிவை ரத்து செய்யும் நிலை இருக்காது'' என்றார்.

சமூக ஆர்வலரான சடகோபன் இது குறித்துப் பேசும்போது, ''ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வந்தாலும், நிறுவனங்கள் பணம் செலுத்தும் முறையையும் தொடர வேண்டும்'' என்றார்.

தற்போது முன்பதிவு, செல்பேசியில் ஐவிஆர்எஸ் மூலம் செய்யப்படுகிறது. 1.54 கோடி எல்பிஜி நுகர்வோர்களில் வெகுசிலரே ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு