Skip to main content

தினமும் தேசிய கீதம் பாடி வகுப்புகளை தொடங்கவேண்டும்: சி.பி.எஸ்.இ

தினமும் தேசிய கீதம் பாடி வகுப்புகளை தொடங்கவேண்டும்: சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு
நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தேசப்பற்றை உருவாக்கும் வகையில், தினமும் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாடியே தொடங்கவேண்டும் என்று மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.). பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த
ஒரு ஆண்டுக்கு முன்பு கொல்கத்தா ஐகோர்ட்டில் உலகில் பல நாடுகளில் இருப்பதுபோல, தேசிய கீதம் பாடியே பள்ளிக்கூடங்களை தொடங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கேற்ப, மத்திய செகண்டரி கல்வி வாரியம், நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, தினமும் பள்ளிக்கூடம் தொடங்கும்போது, தேசிய கீதத்தை இசைத்தோ, மாணவர்களால் பாடச்சொல்லியோ தான் தொடங்கவேண்டும். மாணவர்களுக்கு தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சிகளை அளிக்கவேண்டும். நாட்டின் மீதும், தேசியகொடியின் மீதும் பற்று ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை பள்ளிக்கூடங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றுஅந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.பொதுவாக அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு இறைவணக்கம் பாடி தொடங்குகிறார்கள். இத்தகைய பள்ளிக்கூடங்களில் இனி தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் அல்லது மாணவர்களால் பாடப்படவேண்டும் என்பதுதான் இந்த உத்தரவின் தார்ப்பரியம் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார். சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, மாநில அரசின் உதவிபெறும் பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தாதது. 
என்றாலும், இது மிக நல்ல ஒரு முயற்சி என்ற வகையில், இதை மாநில அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும், சுயநிதி பள்ளிக்கடங்களிலும் மட்டுமல்லாமல், அனைத்து கல்லூரிகளிலும் தொடங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட கல்வித்துறையும், கல்லூரி கல்வித்துறையும் இதற்கான முயற்சிகளை பிறப்பிக்கவேண்டும் என்று அந்த கல்வியாளர் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா