திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் டி.சக்திவேல் முருகன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 14 கிளை
அஞ்சலக அலுவலர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் காலியாக உள்ள ஊர்களின் பெயர், விண்ணப்பிப்போருக்கான தகுதிகள், விண்ணப்பம் அனுப்பும் முறைகள், விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிவங்களை விண்ணப்ப அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி மட்டுமே அனுப்ப வேண்டும்.