Skip to main content

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி: தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு, தகுதியுள்ள பேராசிரியர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தேர்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தின் 9-
வது துணை வேந்தராக கடந்த 2012ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற ஜேம்ஸ் பிச்சையின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.


புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரையிலும் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே துணை வேந்தரை தெரிவு செய்வதற்காக முனைவர் எம்.ராஜாராமை ஒருங்கிணைப்பாளராகவும் முனைவர் டி.வேலுசாமி, பேராசிரியர் என்.செந்தாமரை ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.இந்த நிலையில், தகுதியுள்ள பேராசிரியர்கள் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுக் குழு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில், குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி அனுபவம் மிக்க, 67 வயது மிகாத இந்திய குடிமகன்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய விவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களை நவம்பர் 27-ம் தேதிக்குள் தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இந்த அறிவிப்பை www.b-u.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்