Skip to main content

குறைந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்கிறது: தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
நேற்று தென் மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கையையொட்டி நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தின் வட எல்லையில் நீடிக்கிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.


குறிப்பாக வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யும். தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராசெல்ல இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்த வட கிழக்கு பருவ மழை இதுவரை 38 செ.மீ. பெய்துள்ளது. சென்னையில் 85 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 91 செ.மீ. மழை இதுவரை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா