Skip to main content

இன்று வேலைக்கு வராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் மத்திய அரசு எச்சரிக்கை

இன்று நாடு தழுவிய தர்ணா வேலைக்கு வராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள்
இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா வெளியிட்ட சுற்றறிக்கையில் மத்திய அரசின் எந்தவொரு ஊழியராவது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா