Skip to main content

இறுதி வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியீடு : தேர்தல் அலுவலர் அறிவிப்பு

தமிழகத்தில் பெயர் சேர்த்தல் திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தபட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சோதனைக்கு வரும் வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்
. இது குறித்து மாநில தேர்தல் அலுவலர் அறிவிப்பு:


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ம் ஆண்டு வருகிறது. ஆண்டு தோறும் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரிபார்த்து வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுதும் பல்வேறு முகாம்களை நடத்தி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. இதற்காக முகாம்களில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம், மாற்றம், விலாச மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்காக படிவங்கள் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில்  இறுதி படிவங்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 24 வரை பெறப்பட்டது. மேலும் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலமும் பெறப்பட்ட விபரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இதற்கான இறுதிகட்ட ஆய்வை மேற்கொள்ள வாக்கு சாவடி அதிகாரிகள் வீடுதோறும் வர உள்ளனர். அவர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுகொள்கிறோம். 

மேலும் இதற்கான விபரங்களை தேர்தல் ஆணைய இணையதளமான election.tn.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்களை அளித்தால் அவ்வப்போதைய தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு