Skip to main content

ரெயில்களில் நாளைமுதல் டிக்கெட் கட்டணம் உயர்வு

  தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ரெயில்களில் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் நாளை முதல் அதிகரிக்கிறது.

       இதுதொடர்பாக, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கூடுதல் சேவை வரி விதிப்பால் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு
ரெயில் பயணக் கட்டணம் நாளை முதல் 4.35 சதவிகிதம் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.சேவை வரி உயர்வின் மூலம் புதிய கட்டண விகிதத்தின்படி மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டெல்லியில் இருந்து மும்பை வரையிலான ஏசி முதல் வகுப்பு கட்டணத்தில் ரூ.206 கூடுதல் வசூலிக்கப்படும். அதேபோல் டெல்லி- ஹவுராவுக்கு ஏசி 3 அடுக்கு படுக்கை வசதிக்கான கட்டணம் ரூ.102 கூடுதலாக வசூலிக்கப்படும். சென்னை- டெல்லி இடையிலான ஏசி இரண்டு அடுக்கு படுக்கை வசதி கட்டணத்தில் ரூ.140 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.ஆண்டுதோறும் பயணிகள் ரெயில் கட்டணம் மூலமாக ரெயில்வேக்கு ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது தூய்மை இந்தியா திட்டத்துக்கான சேவை வரி உயர்வின் மூலம் கூடுதலாக ரூ.1000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சேவை வரி 14 சதவீதத்துடன் தூய்மை இந்தியா திட்டத்துக்கான வரியாக அரை சதவீதம் விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 6-ம்தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்