Skip to main content

காஸ் சிலிண்டருக்கு ஆதார் எண் கட்டாயம்காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்

காஸ் சிலிண்டருக்கு ஆதார் எண் கட்டாயம்காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்: ஆதார் எண் வழங்காதவர்களின் மானியத்தை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன
          காஸ் சிலிண்டர் பெறும் நுகர்வோரின் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணையும் கட்டாயம் பெற்று, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய ஏஜன்சிகளுக்கு, காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. 


பெட்ரோலிய நிறுவனங்கள் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகித்து வருகிறது. மத்திய அரசு 'பாஹல்' திட்டப்படி வங்கி கணக்கில் மானியம் வழங்கும் முறை 2015 ஜனவரி முதல் அமலில் உள்ளது. இதற்காக காஸ் நுகர்வோரிடம் வங்கி கணக்கு எண், ஆதார் எண்களை காஸ் ஏஜன்சிகள் பெற்றன. ஆதார் எண் இல்லாதோர் வங்கி கணக்கு எண் வழங்கி மானியம் பெற்றனர். இம்மாத கணக்குபடி ஒரு சிலிண்டர் ரூ.592ல் மானியம் ரூ.182 போக ரூ.410 என கணக்கிட்டு கச்சா எண்ணெய் விலைக்கேற்ப அரசு மானியம் வழங்குகிறது.

ஆதார் கட்டாயம்: இது வரை காஸ் ஏஜன்சிகள் 50 சதவீத நுகர்வோர்களிடம் மட்டுமே ஆதார் எண் பெற்றிருந்தன. மீதி உள்ளோர் ஆதார் எண் இல்லை என தெரிவித்திருந்தனர். இதனால் ஒருவர் இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்றிருந்தாலும் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, காஸ் ஏஜன்சிகள் நுகர்வோர் அனைவரிடமும் கட்டாயம் ஆதார் எண் பெற்று 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யுமாறு காஸ் ஏஜன்சிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

காஸ் ஏஜன்சியினர் கூறுகையில்,' எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் நுகர்வோரின் ஆதார் எண்களை கட்டாயம் பெற்று, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளன. இது வரை ஆதார் எண் வழங்காத நுகர்வோரிடம் கேட்டு பெறுகிறோம்.ஆதார் எண் வழங்காதவர்களின் மானியத்தை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன,' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு