Skip to main content

விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு

விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை
மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வுகளில் சிறுபான்மை(விருப்ப) மொழித்தாள் மதிப்பெண்ணையும் சராசரிகணக்கிட பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்க ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் முறையே ஆங்கிலம், தமிழ் மொழித்தாள்கள், பகுதி 3ல் இதர பாடங்களும், 4ல் விருப்ப
(விருப்ப) சிறுபான்மை மொழிப் பாடமும் உள்ளன.


இதில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சமஸ்கிருதம், அராபிக், பிரெஞ்ச் உள்ளிட்ட ஏழு மொழிகளை தேர்வு செய்து படிப்பர்.இந்த விருப்ப மொழிப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். ஆனால், மொத்த சராசரியை மதிப்பிடும் போது அதை சேர்த்துக் கொள்வது இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதில் நீதிபதிகள், 'மாணவர்களின் உழைப்பை, திறமையை புண்படுத்துவதோ, மறைக்கவோ கூடாது. மொழிப் பாடத்தின் மதிப்பெண் விபரங்களை சராசரி மதிப்பெண்களோடு இணைத்து கணக்கிட வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர்.

தீர்ப்பை அடுத்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் விரைவில் சிறுபான்மை மொழிபாட தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை, சராசரியில் சேர்க்கும் ஆணை பிறக்கப்பிக்கப்படலாம் என தெரிகிறது.மூத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு தற்போது விடிவு பிறக்க உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சில தினங்களில் அரசாணை பிறப்பிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு