Skip to main content

அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வுகள் தற்போதுநடைபெற்று வருகின்றன. 


இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்ட
த்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று ஒரு நாள் தேர்வுகளை மட்டும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்து அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:தொடர் மழை காரணமாக பல்கலைக்கழக துறைகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை நடத்தப்பட இருந்த தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.இந்தத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மற்ற நாள்களில் நடக்க உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா