Skip to main content

மாணவர் தரம் உயர ஆசிரியர் தரம் உயர வேண்டும்

 அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
         மாணவர்கள் வகுப்பறையை விருப்பமுடன், ஆர்வமுடன் கவனிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் வகுப்பிற்கு தகுந்த பயிற்சியுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது எந்த கர்வமும் கொள்ளக்
கூடாது. மாணவர்கள் வகுப்பை விருப்பத்துடன் அனுபவிக்கும் விதத்தில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் திட்டமிட்டு பயிற்சியுடன் வகுப்பறைக்குச் சென்றால்தான், சிறந்த கல்வித் தரத்தைத் தர இயலும் என்றார் அவர்.
மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிருந்தா, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்