Skip to main content

தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் மூலம் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி உள்ளவர்கள் தங்கள் கல்வி, ஜாதி, அனுபவச் சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கான வயது 30-க்குள் இருக்க வேண்டும்.
குறைந்தது 5 வருடம் அனுபவம் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ. 5200-20, ரூ. 20,200, தர ஊதியம் ரூ. 2400 என்ற விகிதத்தில் வழங்கப்படும் என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்