Skip to main content

தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் மூலம் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி உள்ளவர்கள் தங்கள் கல்வி, ஜாதி, அனுபவச் சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கான வயது 30-க்குள் இருக்க வேண்டும்.
குறைந்தது 5 வருடம் அனுபவம் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ. 5200-20, ரூ. 20,200, தர ஊதியம் ரூ. 2400 என்ற விகிதத்தில் வழங்கப்படும் என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா