Skip to main content

ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை பாரதியார் பல்கலை திட்டம்

கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்விக்கூடம், ஆன்லைன் முறையிலான சேர்க்கையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி கூடத்தில், 51 இளங்கலை, 33 முதுகலை, 34 எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், 31 முதுகலை டிப்ளமோ, படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., எம்.எட்., பி.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.


கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்கல்வி முறையில் பயின்று வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் மற்றும் பல்கலையின் தொலைமுறைக் கல்வி கூடத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று மாணவர்கள் சேர்க்கை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளியூர் மாணவர்களின் அலைச்சலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கும் விதத்திலும், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கையை கொண்டு வர பல்கலை திட்டமிட்டுள்ளது. பல்கலை தொலைமுறை கல்விக்கூட அதிகாரி ஒருவர் கூறுகையில், தொலைமுறை கல்விக்கூடத்தில் கம்ப்யூட்டர் பிரிவானது உரிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

தொலைமுறையில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் அலைச்சலை குறைக்க ஆன்லைன் மாணவர் சேர்க்கையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கென, எண்ட் டூ எண்ட் எனும் மென்பொருள் தேவைப்படுகிறது. புதிய துணைவேந்தர் பதவியேற்றவுடன், இதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றார்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா