Skip to main content

சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் துணைத் தலைவராக ரகுராம் ராஜன் தேர்வு

உலகில் உள்ள மத்திய வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அனைத்து வங்கிகளுக்கும் வரைமுறை மற்றும் விதிகளை உருவாக்கி வருவது பிஐஎஸ் என அழைக்கப்படும் சர்வதேச தீர்
வுகளுக்கான வங்கியாகும் (Bank for International Settlements - BIS).
இந்த வங்கியின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜென்ஸ் வெயிட்மேன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வங்கியின் துணைத்தலைவராக அவர் 3 ஆண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுவிட்சர்லாந்தில் நடந்த பிஐஎஸ் இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக இந்தியர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.