Skip to main content

சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதம் குறைப்பு: மத்திய அரசு திட்டம்

சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. வட்டி விகிதத்தைக் குறைப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில் மத்திய அரசு முடிவெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகை
யில், "சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து, மத்திய அரசு இந்த மாத இறுதியில் முடிவெடுக்கவுள்ளது' என்றார்.
தபால் அலுவலகங்களில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்கள், பிபிஎஃப் ஆகியவற்றில் அதிக அளவு வட்டி அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக, அந்த திட்டங்களுடன் போட்டியிட்டு நிரந்தர வைப்பு நிதித் திட்டத்துக்கு முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என்று வங்கிகள் கவலை தெரிவித்தன.
இதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதியமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், தபால் அலுவலகங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாது எனத் தெரிகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா