Skip to main content

திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்

 தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு இரண்டு கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும்.

             மாநில அளவில் தேர்ச்சி பெறும், முதல், 300 மாணவர்கள், தேசிய தேர்வு எழுதலாம். இதில், முதல், 1,000 இடங்களுக்குள் வந்தால், உதவித்தொகை கிடைக்கும்.

மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், 6,766 பள்ளிகளைச் சேர்ந்த, 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அறிவுத்திறன் தேர்வு, கல்வித்திறன் தேர்வு என, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில், 50 மதிப்பெண்களுக்கு ஆங்கில இலக்கணத் தேர்வு உண்டு.

இதில், குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற்றால் தான், மற்ற கேள்விகளுக்கு விடைகள் திருத்தப்படும்; தேர்விலிருந்து மாணவர் நீக்கப்படுவார். நேற்றைய தேர்வில், முதல் தாளில், சிந்தனை மற்றும் கணிதத் திறன் குறித்த, 25ம் எண் கேள்விக்கு, வினாத்தாளில் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன.

அந்தக் கேள்விக்கு, 'ரூட்' அடையாளத்துடன், 90 (√90) என்பது விடையாக வர வேண்டும். ஆனால், அந்த விடை கொடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் நீண்ட நேரம் குழப்பம் அடைந்தனர். இந்த கேள்விக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் வழங்கப்பவில்லை.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்