'ஓவியம், சிற்பம், இசை உள்ளிட்ட, 15 கலைப் பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வு, நவ., 18ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், கலைப்பாட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். எனவே, தென் மாநி
லங்களை சேர்ந்தோர், தமிழக கலைப்பாட தேர்வில் அதிக அளவில் பங்கேற்பர். இந்த ஆண்டு தேர்வுக்கு, அக்., 14ல் விண்ணப்ப பதிவு முடிந்தது.
நவ., 18 முதல் தேர்வு துவங்கவுள்ளதாக, அரசு தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.ஓவியம், டிசைன், எம்ப்ராய்டரி, தையல், இசை, நடனம், மாடலிங், கைத்திறன், பிழை திருத்துனர், அச்சுக்கலை, புத்தகம் பைண்டிங், டி.டி.பி., ஆப்ரேட்டர் உட்பட, 15 பிரிவுகளில் தேர்வு நடக்கிறது. டிச., 19ல் தேர்வுகள் முடிகின்றன. கூடுதல் விவரங்களை, http:/www.tndge.in/ இணையதளத்தில் அறியலாம்.