Skip to main content

குரூப்-4 நேரடி நியமனம்: நவ.16 முதல் கலந்தாய்வு

குரூப்-4 பணிகளில் நேரடி நியமனத்துக்கான முதல் கட்டக் கலந்தாய்வு நவம்பர் 16 முதல் டிசம்பர் 2 வரை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.
இதற்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21-இல் நடத்தப்பட்
டு, முடிவுகள் கடந்த மே 22-இல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, முதல் கட்டக் கலந்தாய்வு நவம்பர் 16 முதல் டிசம்பர் 2 வரை சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதங்கள் விரைவு அஞ்சல், மின்னஞ்சல், குருந்தகவல் ஆகியவற்றின் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.
அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பது உறுதி கிடையாது. தகுதி, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு நடைபெறும். கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி