Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு: குழு பரிந்துரை

ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 48 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், 55 லட்சம் பேர், ஓய்வூதியம் பெறுகின்றனர்.
தற்போதைய ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.இதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு அமைக்கப்படும்.
இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய வீதம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2014ல், ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, தன் அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் நேற்று தாக்கல் செய்தது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் விபரம் வருமாறு:
* மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஊதியம் மற்றும் இதர படிகள் சேர்த்து, 23.55 சதவீத அளவுக்கு மொத்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதில், ஊதிய உயர்வு மட்டும், அடிப்படை சம்பளத்தில், 16 சதவீதமாகவும், இதர படிகள், 63 சதவீதமாகவும் இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஓய்வூதியதாரர்
களுக்கான ஓய்வூதிய உயர்வு, 24 சதவீதமாக இருக்க வேண்டும்.* ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம், 2.25 லட்சம் ரூபாயாகவும் இருக்க வேண்டும். கேபினட் செயலர்
களுக்கும், அவருக்கு சமமான அந்தஸ்து உள்ள அதிகாரி
களுக்கும், 2.50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.* இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும், 3 சதவீத சம்பள உயர்வும், 24 சதவீத ஓய்வூதிய உயர்வும் வழங்க வேண்டும்.
* ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே பட்ஜெட்டிற்கு சென்று விடும்.
* 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' முறையை, ராணுவத்தினருக்கு மட்டுமின்றி, மத்திய அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த, செலவுகள் துறை செயலர் தலைமையில், செயலகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம், 0.65 சதவீதம் நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.* மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையானது, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊதியக்குழுவின் இந்தப் பரிந்துரைகள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டதும் அமல்படுத்தப்படும். 2008ல் நியமிக்கப்பட்ட, ௬வது ஊதிய குழு, மத்திய அரசு
ஊழியர்களுக்கு, 35 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்