Skip to main content

பிளஸ் 2 மாணவர்களுக்கு J.E.E., தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 முடிக்க உள்ளோர், உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஜே.இ.இ., பொது நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதே, மிகப்பெரிய லட்சியம். இந்த நிறுவனங்களில் படித்தால்
,
இறுதியாண்டு படிக்கும் போதே, பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும்.


இந்தக் கல்வி நிறுவனங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி பெற்றவை யாக உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க, தேசிய அளவில், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 பொது தேர்வு முடிந்ததும், இந்த தேர்வை எழுத வேண்டும்.முதலில், ஜே.இ.இ., சாதாரண பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே, 'அட்வான்ஸ்ட்' தேர்வு எழுத முடியும். 'வரும் கல்வி ஆண்டுக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு, 2016 மே, 22ல் நடக்கும்' என, 
மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, இந்த தேர்வை, கவுஹாத்தி ஐ.ஐ.டி., நடத்துகிறது; இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கும். 

இதில் தேர்ச்சி பெற்றால், 19 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் படிக்க இடம் கிடைக்கும். இந்த நிறுவனங்களில், பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பார்ம்., - பி.எஸ்., - பி.எம்., உள்ளிட்ட, 11 பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேரலாம். தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை, 
http://www.jeeadv.ac.in/index.php என்ற இணையதளத்தில் அறியலாம்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்