Skip to main content

புதிய 1 ரூபாய் நோட்டு ஆன்லைனில் விற்பனை.

புதிய 1 ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு 1 ருபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1–14 செலவாகிறது. எனவே மத்திய அரசு கடந்த 1994–ம் ஆண்டு முதல் 1 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டது. 

நாணயங்கள் மட்டும் புழக்கத்தில் இருந்து வந்தன. அதே போன்று
2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதற்கான விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆன்லைனில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த புதிய 1 ரூபாய் நோட்டுகளை பெரும்பாலானவர்கள் புழக்கத்தில் விடுவதில்லை. அதை பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு தான் விற்க முயற்சிப்பார்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா