Skip to main content

திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டி: ஆய்வுக் கட்டுரைகளை டிச.15-க்குள் அனுப்பலாம்

வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருவள்ளுவர் தின கட்டுரைப் போட்டிக்கு, டிசம்பர் 15-க்குள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.
இது குறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:

வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, மலர் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடத்தப்பட இருக்கும் திருவள்ளுவர் தின கருத்தரங்குக்கு "திருக்குறளில் உயிர்ச்சூழல்' அமைவு (Eco-System) எனும் தலைப்பின் கீழ் (ஃபாண்ட் அளவு 14-இல் 10 பக்கங்கள்) புதிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வள்ளுவத்துக்குள் புதைந்துள்ள வாழ்வியல் விழுமியங்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், தேர்வு பெறும் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும். மேலும், கட்டுரைக்கு அரை பவுன் தங்கக் காசு முதல் பரிசாக வழங்கப்பட உள்ளது.
கருத்தரங்கு நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதில், பங்கேற்க விரும்புவோர், கட்டுரையின் இரண்டு நகல்களுடன் தொடர்பு முகவரி, தொலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து டிசம்பர் 15-க்குள் அனுப்ப வேண்டும். இதற்கான முகவரி, "வள்ளுவத் தமிழ் உதய முரசு அறக்கட்டளை, 71-3, கோவலன் இரண்டாவது வீதி, ஆசிரியர் குடியிருப்பு, ஈரோடு-638 011'. மேலும் விவரங்களுக்கு 94430-27280 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு