Skip to main content

குரூப் - 1 தேர்வு: 2.14 லட்சம் பேர் பங்கேற்பு

அரசு துறைகளில் காலியாக உள்ள, 74 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' முதல்நிலைத் தேர்வில், 2.14 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழக அரசுத் துறையில், துணை கலெக்டர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பணி உட்பட, 74 காலியிடங்களுக்கான, குரூப்- 1 முதல் நிலைத் தேர்வு
நேற்று நடந்தது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சென்னையில், 126 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும், 725 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், மாநிலம் முழுவதும், 2.14 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.


டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, செயலர் விஜயகுமார் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர், சென்னையிலுள்ள சில தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். அருள்மொழி கூறுகையில், ''விரைவில் இந்தத் தேர்வுக்கான, 'கீ - ஆன்சர்' வெளியாகும். குரூப் - 4 பணியிடங்களுக்கான காலியிடப் பட்டியல் அரசிடமிருந்து வந்ததும் நிரப்பப்படும்,'' என்றார். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.